2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக காதர் மஸ்தான் நியமனம்

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு  மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவராகவும் மேற்படி மூன்று மாவட்டங்களினதும் 15 பிரதேச செயலகங்களினதும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் வன்னிமாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஜனாதிபதியினால் நியமிக்கபட்டுள்ளார்.

மேற்படி நியமனம் தொடர்பாக நியமனத்தின் பிரதிகள் ஜனாதிபதியினால் மூன்று மாவட்டங்களினதும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான வர்த்தக கைத்தொழில் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் மன்னார் மாவட்ட இணைத்தலைவரும் நாடாளுமனற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சி.சிவமோகன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களினுள் உள்ளடங்கும் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள்ளும் அரச அரச, சார்பற்ற சகல அபிவிருத்திப் பணிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் அமுல்படுத்துனர்களாகவும் அவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும் இவ் இணைத் தலைவர்கள் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X