2025 ஜூன் 07, சனிக்கிழமை

‘அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுகின்றன’

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பிரதேச சபையால் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் சில வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி (PSDG) மற்றும் கூட்டிணைந்த சமூக பொறுப்பு நிதி (CSR) மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி சபையின் நிதி என்பவற்றின் கீழ் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை எதிர்வரும் நாட்களில் மத்திய அமைச்சின் நிதிகளூடாகவும் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைத்திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இயகச்சி - கோவில்வயல் பகுதிக்கு, மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வுசெய்ய சென்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .