2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அமைச்சர் மனோ- வவுனியா பிரஜைகள் குழு பிரத்தியேக சந்திப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தனிம் கபில்நாத்

காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர் மனோ கணேசனும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் புதிய ஆட்சி மாற்றச் சூழலிலும் சிவில் சமுக மனித உரிமை சார்பு பணிகளில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் சந்தித்த, சந்தித்துவரும் ஆபத்துகள், சவால்கள் குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், அவற்றை நிவர்த்திசெய்து எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் அக்கறை செலுத்தினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று பிரத்தியேகமாக நடைபெற்ற இச்சந்திப்பில்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சி.பாஸ்கரா, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பிரியாணி குணசேகர,  பிரஜைகள் குழுவின் சார்பில் தலைவர் கி.தேவராசா, செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம்-சேகுவேரா, பொருளாளர் கோ.ராஜா, நகரப்பகுதி இணைப்பாளர் வி.புவிகரன், வவுனியா தெற்கு பிரதேச இணைப்பாளர் தி.உதயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டுக்காக  அமைச்சர் மனோ கணேசன்   ஆற்றிய பணிகளுக்காகவும் அவரது ஜனநாயக மக்கள் முன்னணியினர் பிரஜைகள் குழுவினரின் செயல்பாடுகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காகவும் அமைச்சர் மனோ கணேசனை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் பாராட்டி மதிப்பளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X