Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழவின் பரிந்துரைகள் பற்றிய நூலில் 41ஆவது பக்கத்தில் காணப்படுகின்ற புகைப்படத்தில் எனது மகன் பாலேந்திரன் மகிந்தன் காணப்படுகின்றான். அம்பேபுச அரச முகாமில் புனர்வாழ்வு பெற்றதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்கே?. எனவே அவரை மீட்டுத்தாருங்கள்” என தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி, காணால் போனோர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மூன்றாம் நாள் அமர்வில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த புகைப்படம் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து ஊடகவியலாளர் ரொம் ஹால் என்பரால் அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் எடுக்கப்பட்டது. அதனை லங்காபுவத் ஊடகம் வெளியிட்டிருந்தது.
அப்போது மேஜர் ஹேமன்பெர்ணாட்டோ பொறுப்பாக இருந்துள்ளார். இந்த புகைப்படத்தையே கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய பரிந்துரைகள் அடங்கிய நூலில் 41 பகத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகிறது எனும் விபரத்துடன் போடப்பட்டுள்ளது.
தனது மகன் க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எடுத்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்குச் செல்வது வழமை என்றும் அவ்வாறே 2008-12-19 அன்று கிளிநொச்சி கல்மடுநகரில் நாங்கள் இருந்த போது வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்த அவர்.
2009.01.07 அன்று நாம் இருந்த பகுதியில் செல் தாக்குதல் உக்கிரமடைந்ததனால், அங்கிருந்து நாம் வெளியேறி விட்டோம். அவருக்கு மீண்டும் வருவதற்கு நாம் எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லை. எமக்கு தெரிந்தவர்களிடம் அம்மா எங்கே என கேட்டு விசாரித்து கூட இருக்கிறார்
இறுதியாக மாத்தளன் இரட்டைவாய்க்கால் பகுதியில் பலர் மகனை கண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, எனது மூத்த மகனை திருகோணமலையில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக்கொலை செய்துவிட்டனர். மற்றொரு மகனும் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டான். தற்போது மூன்றாவது மகனையும் காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
46 minute ago