2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர் சடலமாக மீட்பு

Janu   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, சேமமடு குளத்தின் வான் பகுதியில் இருந்து,  மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன்  என்ற அரச ஊழியரின்   சடலம் ஞாயிற்றுக்கிழமை (15)  மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் சனிக்கிழமை (14) மாலை குறித்த இளைஞன் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளதுடன் நீண்ட நேரமாகியும்   அவர் காணாததால் நண்பர்கள் தேடியுள்ள நிலையில் அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .