2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கருத்தறியும் நிகழ்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் வகையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அக்குழுவைச் சேர்ந்த சீ.இளங்கோவன், எஸ்.தவராசா, எஸ்.விஜசங்கர், ஜே.குரிஸ், என்.செல்வகுமாரன், நதீஸ்கர் ஆகியோர் வருகை தந்து மக்கள் கருத்துக்களை பெற்றனர்.

இதேவேளை, மக்கள் கருத்தறியும் நிகழ்வு இன்று சனிக்கிழமையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X