2025 நவம்பர் 15, சனிக்கிழமை

’அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை’

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்புகளில் அதிகரித்து இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இது தொடர்பில் அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார் எனவும் இதற்கமைய அதற்குரிய நடவடிக்கைகளை தாம் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளோமெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X