2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

George   / 2016 மே 17 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள பாரிய குளமான முகத்தான்குளத்தின் குளக்கட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா, நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வவுனியாவில் பெய்து வரும் கடும் மழையினால் முகத்தான்குளம் குளக்கட்டில் நேற்று மாலை நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில வேளைகளில் குளம் உடைப்பெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. 

எனவே முகத்தான்குளம், செட்டிகுளம், முகத்தான்குளம் பண்ணை இரண்டு உட்பட அயல் கிராம மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X