Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆசிரிய மநாநாடு நடைபெறுவது கல்வி வளர்ச்சியில் ஓர் உந்துசக்தியாக அமையுமென கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் தெரிவித்தார்.
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையினால் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) தொடங்கிய ஆசிரிய மாநாட்டில் தொடக்கவுரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில்,
ஆசிரிய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது. முதலாவது கல்விக் கண்காட்சி, இரண்டாவது ஆசிரியர்களின் ஆய்வுரைகள், மூன்றாவது ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள். முதலில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான கண்காட்சியினை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்தோம். இடைநிலை, உயர்தர மாணவர்களுக்கான கண்காட்சியினை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைத்தோம்.
ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த மண்ணிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆசிரியர்களினாலேயே கிளிநொச்சி மண்ணின் கல்வி வளம் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. அவ்வாறான ஆசிரியர்களினால் நடாத்தப்படுகின்ற இவ் ஆசிரிய மகாநாடு சிறப்பாக இடம்பெறவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago