2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆசிரியர்கள் நியமிக்காமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, செட்டிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு, கடந்த மூன்று வருடங்களாக முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது இன்று  புதன்கிழமை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை புறக்கணித்து, பாடசாலையின் வாயிலில் கூடி நின்றதுடன், பெற்றோர்களும் இணைந்து பாதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர், மாணவர்கள் வீதியோரங்களில் இருந்து கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் உணவையும் உட்கொண்டனர்.

இதேவேளை, பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இது தொடர்பில், தான் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பாடசாலை அதிபர் ஜெய்சி சத்தியசீலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X