2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ப.சுதர்சன் இன்று (19) உத்தரவிட்டார்.

வழக்கு தொடுனர் தரப்பின் எவரும் சமூகமளிக்காத காரணத்தால் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டும் என  எதிர்பார்ப்பதாக காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .