2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆய்வு மாநாடு ஜுன் மாதம் இடம்பெறும்

Kogilavani   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு, எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

வவுனியா வளாகத்தில் திங்கட்கிழமை (22)  மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'இம் மாநாடானது வணிகக்; கற்கைகள் மீதான ஆய்வு மாநாடு 2016 என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. 'உண்மையான உலக வணிக சவால்களுக்கான ஆய்வு ரீதியான தீர்வுகள்' என்பதாக இதன் தலைப்பு அமைந்துள்ளது.

கணக்கீடும் நிதியும், விவசாய வணிகம், வணிக தகவல் முறைமைகள், வணிக தொடர்பாடல், அனர்த்த முகாமைத்துவம், முயற்சியாண்மை, மனித வள முகாதை;துவம், அறிவு முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், செயற்பாடு மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவம், திட்ட முகாமைத்துவம், தந்திரோபாய முகாமைத்தவம், சுற்றுலா மற்றும்; விருந்தோம்பல் முகாமைத்துவம் போன்ற தலைப்புகளில் நாம் ஆராய்ச்சி கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேச ரீதியிலும் இலங்கையில் இருந்தும் எதிர்பார்க்கப்படும் இக்கட்டுரைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கபெற வேண்டும்.

மாநாட்டில் பங்குபற்றுபவர்கள், ஜுன் மாதம்  முதலாம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துகொள்ள வேண்டும். vau.jfn.ac./jbs/rcbs என்ற இணையத்தளத்தின் மூலம் ஏனைய தகவலை அறியலாம் என்பதுடன்   என்ற rcbs2016@ gmail.com மின்னஞ்சல் முகவரியூடாக பதிவுகளை மேற்கொள்ளமுடியும்" என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X