2025 ஜூன் 07, சனிக்கிழமை

ஆலய சுற்று மதிலில் எழுதப்பட்ட வசனங்களால் சர்ச்சை

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில் உள்ள மதில் சுவர்களில், "எங்க ஊரு" , "எங்க கெத்து" என எழுதப்பட்டுள்ள வசனங்கள், அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பில், ஆலய நிர்வாகம், மன்னார் பொலிஸ் நிலையத்தில், இன்று (24) முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த ஆலயம் நீண்ட காலமாக பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையிலேயே, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவ்வாலயத்தின் உற்சவம் அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில், அதற்காக அவ்வாலயத்தின் மதில்கள் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று (23) இரவு இனந்தெரியாதோரால், ஆலய சுவர்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .