2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் ஐவர் கைது

Thipaan   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து, கைது செய்த கடற்படையினர், அவர்களை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த இரு தடவைகள் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .