2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 6 பேருக்கு விளக்கமறியல்

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் வியாழக்கிழமை(9) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, இலுவைப்படகு (டோலர்) ஒன்றின் மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட இந்த 6 மீனவர்களையும் கடல் ரேந்தில் ஈடுபட்ட கடற்படையினர், வியாழக்கிழமை அதிகாலையில் கைது செய்து, தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் வியாழக்கிழமை மதியம் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ், குறித்த 6 மீனவர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த 31 ஆம் திகதி அதிகாலை, தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .