Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்புகளில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை விரைவில் உரிய அதிகாரிகள் கட்டுப்படுத்தத் தவறினால், இந்திய இழுவைப்படகுகள் தாக்கி அழிக்கப்படுமென, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் லோ. ஜூட் நிக்சன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியுள்ள நிலையையும் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குச் செல்லமுடியாத சூழ்நிலையையும் பயன்படுத்தி, அத்துமீறிய செயற்பாடுகளில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனரென்றார்.
இச்செயற்பாட்டால் தமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலை தொடருமானால் எமது மீனவர்கள் பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது எனவும் கூறினார்.
எனவே, இவ்விடயத்தில் உரிய தீர்வுகள் கிடைக்காவிடில் தாங்கள் நேரடியாக இறங்கி, இந்திய இழுவைப் படகுகளைத் தாக்கி அழிக்கவேண்டிய நிலை ஏற்படுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோமெனவும் கூறினார்.
இதேவேளை, முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் கடற்படையினருக்குத் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்களுக்கு அருகில் சென்று அவர்களைத் துரத்துவதற்கு அச்சப்படுகின்றார்களெனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago