2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியாவில் தங்கம் வென்ற யுவதிக்கு கௌரவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 21 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

இந்தியாவில் 27 அன்று  நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த செல்வி  ஜெகதீஸ்வரன் விஜிதா நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்தார்.

இவருக்கு நேற்று மாலை மாங்குளத்தில் பெரும் கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது.

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்

நிகழ்வில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .