2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இயந்திரத் தகட்டு கொள்ளை: சிவ சுப்ரமணிய கோயிலில் சம்பவம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மார்க் ஆனந்த்

பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவு, நேற்று புதன்கிழமை (09) இரவு உடைக்கப்பட்டு, விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இயந்திர தகடு மட்டுமன்றி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டிருந்த கால் பவுண் தங்கச் சங்கிலியும கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கோவிலின் குருக்கள் மகா தர்ம குமார், இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை கோயிலுக்குச் சென்றபோதே  கோயிலின் கதவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இக்கோயிலுக்கு சற்றுத் தொலைவிலுள்ள மதுபானக் கடையொன்றும் புதன்கிழமை இரவு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த  மாதுபான போத்தல் திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X