2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர், தனக்கு தானே துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.

64 ஆம் படைபிரிவை சேர்ந்த பி.ரி.இ.விமலரட்னே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X