2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இராணுவத்தினரால் பூநகரி கோட்டை உடைப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, பூநகரியில் தங்களுடைய கலாசார நிகழ்வு ஒன்றுக்காக,  அங்குள்ள தொன்மை மிக்க கோட்டையின் பகுதிகளை இராணுவத்தினர் உடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை(09) மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து, தங்களது நிகழ்வு ஏற்பாடுட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.

நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த பூநகரி  வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளன. பழமை மிக்க செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளமை  மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள மரபுரிமை சின்னமாக விளங்கக் கூடிய இந்தக் கோட்டையை பாதுகாக்க வேண்டிய நிலையில்,  அது இராணுவத்தினரால்  தங்களுடைய  ஒரு நாள் நிகழ்வுக்காக உடைத்து சேதப்படுத்தியமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது.

இந்தக் கோட்டை இலங்கை தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டியது என அறிவிக்கப்பட்ட போதும்  உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இனிவரும் காலங்களில் இந்தக் கோட்டையை பாதுகாக்க முன்வர வேண்டும் என பிரதேச பொதுமக்கள்  கோரிக்கை விடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X