Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 04, புதன்கிழமை
சண்முகம் தவசீலன் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு உடையார்கட்டுக் குளத்தில் பொருத்தியிருந்த நீர் இறைக்கும் இயந்திர தொகுதிகளை இராணுவம் அகற்றியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டுக் குளத்தில் இருந்து படையினரின் முகாம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நீர் எடுப்பது சட்டத்துக்கு முரணானதும் மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகளுக்கு பாதிப்பானதுமாகும். எனவும், எனவே இதனை உடனடியாக நிறுத்துமாறு கடந்த புதுக்குடியிருப்பு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதனை நிறுத்தி உபகரணங்களை அகற்றஇராணுவத்தினர் சம்மதமும் வழங்கியிருந்தனர்.
இருப்பினும் அவை அகற்றப்படவில்லை இதனால் அபிவிருத்திக்குழுவில் உறுதியளித்த தீர்மானத்தை நிறைவேற்றாது இராணுவம் உதாசீனம் செய்துள்ளது எனவும் உடனடியாக இதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இல்லையேல் தாம் சிறுபோகத்தை கைவிடுவதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக கடந்த மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டுக் குளத்தில் படையினர் தமது தோட்ட செய்கைகளுக்காக மூன்றுக்கு மேற்பட்ட பாரிய நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி குளத்தின் நீரை எடுத்து வந்தனர்.
இதனால் குளத்தின் நீர் மட்டம் மிக வேகமாக குறைவடைவதுடன், இவ்வாண்டு முழுமையான சிறுபோகச் செய்கை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படுமென விவசாயிகளால் பல தரப்பினரிடமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், குறித்த இயந்திரங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
40 minute ago
46 minute ago