2025 மே 03, சனிக்கிழமை

உயர் அதிகாரிகளுக்கு தொற்று இல்லை

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில் உள்ள உயரதிகாரிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், எவருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

வவுனியா நீதிமன்றத்தில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. 

குறித்த சட்டவாதி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்ததை அடுத்து, வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் முடிவுகள், இன்று (17) வெளியானதன் அடிப்படையில், அதிகாரிகளில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X