Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
வயல் காணிகளில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற கிளிநொச்சி பிராந்தி ஊடகவியலாளர் தர்மலிங்கம் சிவா மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்து, அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கிளிநொச்சி ஊடக அமையம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தங்களுடைய வயல் நிலங்களில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலையடுத்து, அது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரசிவன் (சிவா) மீது சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததோடு, 'ஊடகங்களில் செய்தினை பிரசுரித்து விட்டு எவ்வாறு கிளிநொச்சியில் இருக்க போகின்றாய் என்பதனையும் தாங்கள் பார்க்கின்றோம்' கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தினை கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது.
இது தொடர்பில் குறித்த ஊடகவியலாளர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாத கிளிநொச்சி பொலிஸார், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவரை அழைத்து சமரசம் செய்வதாகவும் குறிப்பிட்டமை எமக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுப்படுத்துமாறு கிளிநொச்சி ஊடக அமையம் கோரிக்கை விடுக்கிறது' இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago