2025 ஜூன் 04, புதன்கிழமை

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை : உயிரை மாய்த்த மாணவி

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில், கல்விப் பொதுத்தராதர பரீட்சையில், எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையால் மாணவியொருவர் இன்று (29) காலை கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து, தாயைப் பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்த, சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி நேற்று (28) இரவு வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி, 1 பி, 1 சி, 2 எஸ் சித்திகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .