Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
“வவுனியாவில் எய்ட்ஸ் பரவுவதற்கு விபசாரமே காரணம்” என, பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட வைத்திய கலாநிதி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
வவுனியாவில் எயிட்ஸ் நோயின் பாதிப்பு தொடர்பாக வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வவுனியாவில், கடந்த காலத்தை விட தற்போது எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் விபசாரமே காரணமாகும். வவுனியாவில் இவ்வாறான விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
“மேலும், இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை எதிர்காலத்தில் தடுக்கும் பட்சத்தில், வவுனியாவில் எய்ட்ஸ் தொற்றை இல்லாதொழிக்க முடியும்.
“இவ்வருடம் வரை, இலங்கையில் 2,766 பேர் எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் வவுனியாவில் 20 பேர் வரை இந்நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் பரவுகின்ற எச்.ஐ.வி தொற்று, பெரும்பாலும் பாலுறவினாலேயே ஏற்படுகின்றது என்பதால், எயிட்ஸ் இல்லாத நாடாக இலங்கையை மாற்றிட கட்டுப்பாடான, பாதுகாப்பான உறவே சிறந்தது.
“இது தவிர்ந்து இதர வழியிலான தொற்றுகள் பற்றியும் அறிந்து அவதானமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
07 Jun 2025