2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஏ9 வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

கிளிநொச்சி, ஏ9 பரந்தன் வீதியில் வயோதிபரின் சடலமொன்று பலத்த காயத்துக்குள்ளான நிலையில் இன்று சனிக்கிழமை (12) காலை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் பயணித்த குறித்த வயோதிபரை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாகனமொன்று மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இன்று காலை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபர் யார் என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லையெனவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .