Editorial / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில், மாங்குளம் நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று , மீண்டும் முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளையில், மாங்குளம் நோக்கி வருகை தந்த ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026