Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, ஒதியமலை பிரதேசத்தில் சேதமடைந்;து காணப்படும் 4 குளங்களையும் புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒதியமலை கிராமத்தில் உள்ள கருவேப்பமுறிப்பு, செம்பிக்குளம், தனிக்கல்லு, பனையமுறிப்பு ஆகிய நான்கு குளங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
மேற்படி குளங்களைப் புனரமைத்து தமது வாழ்வாதார தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிகவும் பழமை வாய்ந்த தமது கிராமத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக எல்லையோரக் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தென் பகுதியில் இருந்து பெருமளவான காட்டு யானைகள் கொண்டு வந்து இந்தக் கிராமக் காடுகளில் விடப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் மக்கள் கூறினர். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்;குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago