Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு ஒப்பந்தம் வழங்காமல் மாதர் சங்கத்துக்கு வழங்கியமையினாலேயே வவுனியா, மதகுவைத்தகுளத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.
வவுனியா, மதகுவைத்தகுளத்தில் கிராம சேவகருக்கு எதிராக மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மதகுவைத்தகுளம் கிராமத்துக்கு சில திட்டங்கள் வழங்கப்பட்டன. இதனை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உட்பட கிராமத்தில் அதிகளவானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள சிலர் தமக்கு அங்கு வழங்கப்பட்ட வேலைகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குமாறு கோரினர்.
எனினும் அதனை அவர்களுக்கு வழங்குவதற்கு முடியாத நிலை உள்ளது. எனவே, நாம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் வேறு அமைப்புகளின் ஊடாக அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி செல்கின்றோம்.
இதனை பொறுக்க முடியாத சிலர், எமக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மக்களுக்கு முழுமையாக அபிவிருத்தி கிடைக்க வேண்டுமாயின் அதனை சரியாக செய்யவேண்டும். அதனையே நாம் செய்கின்றோம். சிலர் இவ்வாறு ஒருசிலரை வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
45 minute ago