2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஒலுமடுவில் 281 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

George   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட 10 நீர்ப்பாசன குளங்களின் கீழ், 281 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் நாகராஜா சுஜீபரூபன் தெரிவித்தார்.

'ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கீழ் 23 குளங்கள் உள்ளன. வரட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றியுள்ளமையால், சிறுபோக நெற்செய்கைக்காக 10 குளங்களை தெரிவு செய்துள்ளோம்.

சிறுபோகத்தில் 266 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையையும், 15 ஏக்கரில் உபஉணவு செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதனை 181 விவசாயிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

தச்சடம் பன்குளத்தின் கீழ், 46 ஏக்கரும் கற்;கிடங்கு குளத்தின் கீழ், 47 ஏக்கரும் பெரிய புளியங்குளத்தின் கீழ் 23 ஏக்;கரும் முறிகண்டி குளத்தின் கீழ், 12  ஏக்கரும் ஒலுமடு குளத்தின் கீழ் 42 ஏக்கரும், அம்;பகாமம் குளத்தின் கீழ், 25 ஏக்கரும் புலுமச்சிநாத குளத்தின் கீழ், 29 ஏக்கரும் மதகுவைத்த குளத்தின் கீழ், 14 ஏக்கரும், புதிர் குளத்தின் கீழ், 16 ஏக்கரும் மணவாளன் பட்டமுறிப்பு குளத்தின் கீழ், 12 ஏக்கரும் என 266 ஏக்கரில் நெற்பயிர்;செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மதகுவைத்த குளத்தின் கீழ், 5 ஏக்கரில் கச்சானும், ஒலுமடு குளத்தின் கீழ் 4 ஏக்கரில் கச்சானும் பள்ளம்; குளத்தின் கீழ், 5 ஏக்கரில் கச்சானும் தச்சடம்பன் குளத்தின் கீழ், 1 ஏக்கரில் கச்சான் என மொத்தம் 15 ஏக்கரில் உபஉணவு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X