Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
'இளைய சமூகம் கலாசார ரீதியாக பல்வேறுபட்ட சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. இச்சவால்கள் அனைத்தும் எமது இனத்தின் எதிர்கால இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. எனவே, எமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒழுக்கமுடைய எதிர்கால சந்ததியை உருவாக்க பங்களிக்கவேண்டும்' என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா தெரிவித்தார்.
துணுக்காய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அறநெறி பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடலொன்று சனிக்கிழமை(09) காலை 10.30 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரதாபனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
'பெற்றோர் தமது பிள்ளைகளின் ஒழுக்க நெறி விடயங்களில் கூடிய அக்கறையுடன் செயற்பட வேண்டும். மேலும், அறநெறி வகுப்புக்களை நடத்தி வருகின்ற ஆசிரியர்களின் சேவையானது எமது மாணவர்களின் நல்லொழுக்க வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக விளங்குகிறது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago