2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோடா, கசிப்புடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 மே 10 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தர்மபுரம் கட்டைக்காடு பகுதியில் 2575  போத்தல் கோடா  மற்றும்  56 போத்தல்  கசிப்புடன் ஒருவர், நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  இரகசிய  தகவலையடுத்து,  சம்பவ இடத்துக்கு  சென்ற தர்மபுரம் பொலிஸ்  நிலைய  பொறுபதிகாரி  சத்துரங்க  தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நீண்ட  நேர  தேடுதல்  நடவடிக்கையின்போது, கட்டைக்காடு  குளம்  ஒன்றில்  மறைத்து  வைக்கப்பட்டிருந்த பத்து  பெரலில்  இருந்த 2575  போத்தல் கோடா மற்றும்  இரண்டு  கான்களில் இருந்த 56 போத்தல் கசிப்பு  என்பன மீட்கப்பட்டன.

இதன்போது, வவுனியாவை  சேர்ந்த  சந்தேகநபர்  ஒருவரையும்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X