2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கோட்டைகட்டியகுளம் பாடசாலையில் உயர்தரம் கற்பிக்க அனுமதி

George   / 2016 மே 13 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் கோட்டைக்கட்டியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 1சி ஆக தரமுயர்த்தப்பட்டதுடன், உயர்தரத்தில் கலைப்பிரிவை நடத்துவதற்கு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் அனுமதி வழங்கியுள்ளார்.

துணுக்காய் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் கோட்டைக்கட்டியகுளம் அ.த.க.பாடசாலை உள்ளது. இப்பாடசாலையிலிருந்து ஆண்டுதோறும் உயர்தரம் கற்கக்கூடிய வகையில் க.பொ.த. சாதாரண தரத்தில் மாணவர்கள் சித்தியடைந்த போதிலும், அந்த மாணவர்கள் நீண்டதூரத்திலுள்ள அக்கராயன் மகா வித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி என்பவற்றுக்கு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் சென்று உயர்தர வகுப்புகளில் கற்றுவந்தனர்.

இந்நிலையில், இவ்வாண்டு க.பொ.த. சாதாரண பரீட்சை முடிவுகள் வெளியானவுடன் பெற்றோர்கள் இப்பாடசாலையில் உயர்தர வகுப்புகளை ஆரம்பியுங்கள் என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் மனுக் கையளித்திருந்தனர்.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடத்தி உயர்தர வகுப்பை பாடசாலையில் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி இப்பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவிற்கான வகுப்பு தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையும் தரமுயர்த்தப்பட்டுள்ளது. உயர்தர வகுப்புக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் வடமாகாண கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X