Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 08 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
'குடும்பங்களிடையே நல்லுறவைப் பேணி தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் கொள்ளை போன்ற பல சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும்' என முல்லைத்தீவு மல்லாவிப் பொலிஸார் சனிக்கிழமை (07) தெரிவித்தனர்.
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் கிராம மக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பொலிஸார்,
'கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். ஒரு வீட்டிலிருந்து செல்பவர்கள் பக்கத்து வீட்டில் தாம் எங்கே செல்கின்றோம். வீட்டினைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்ற தகவல்களை தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் ஒரு விழிப்புணர்வு இருக்கும்.
கிராமங்களுக்குள் புதிதாக வருபவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கவேண்டும். பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய பொறுப்பு பொருட்களுக்குச் சொந்தகாரர்களையே சார்ந்ததாகும். எல்லாவற்றுக்கும் மேலாக கிராம மட்டத்;தில் ஒரு விழிப்புணர்வு எப்போதும் அவசியம் என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago