2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது

Princiya Dixci   / 2016 மே 09 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சுமார் 22 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X