Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 12 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை பணி, பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
பள்ளிக்குடா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள யூது தேவாலயத்துக்குச் சொந்தமான ½ ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை திணைக்கள பணியாளர்கள், வியாழக்கிழமை (12) அங்கு சென்றிருந்தனர்.
குறித்த பகுதியில் உள்ள கடற்படை முகாமை நிரந்தர முகாமாக மாற்றும் நோக்கில் தேவாலயத்துக்கு சொந்தமான காணியை சுவீகரிப்;பதற்காகவே இந்த நிலஅளவை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நில அளவை செய்வதை கேள்வியுற்ற பிரதேச மக்கள், பங்குதந்தை டி.ராயர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை ஆகியோர் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து, தமது முயற்சியை கைவிட்ட நில அளவை திணைக்கள பணியாளர்கள் திரும்பிச் சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
46 minute ago