Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 23 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
காணாமல் போனோர் விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்படும் என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எம். சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதனை நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துவோம். அவற்றில் உள்ளடங்கிய விடயங்களை அரசியல் அமைப்பில் உள்ளடக்கி புதிய அரசியல் அமைப்பு உருவாகுவதற்காக பேச்சுக்களையும் நடத்துவோம்.
விசேடமாக எங்கள் மக்களின் காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் சில சில இடங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட அதில் இராணுவ பிரசன்னம் உள்ளமை முக்கிய பிரச்சினையாக உள்ளது.
ஆகவே, நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் காணிகள் விடுவிப்பு தொடர்பாக வலியுறுத்துவோம். சிறுசிறு பகுதியாவது விடுவிக்கப்படுகின்ற முறைமை துரிதப்படுத்தப்படவேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதனால், அரசாங்கதுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்பாக விரைந்து நாம் செயற்படவேண்டும் என்பதும் காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பிலும் விசேடமாக நாம் ஆராயந்திருந்தோம்.
அது குறித்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தபோதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. குறித்த விடயங்கள் தொடர்பாக பெறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. எனவே அதனை நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையாக நாங்கள் கொண்டுவருவோம்.
2010ஆம் ஆண்டில் இருந்து மக்கள ஆணையை பெற்று வந்திருக்கின்றொம். கடந்த தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே ஆணையை பெற்றோம். தமிழரசுக் கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் நாம் போட்டியிட்டாலும் வேறு பங்களாளிக் கட்சிகள் 3 உடன் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்கள் ஆணையை பெற்றோம். அந்த அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நாம் செயற்படுவோம்' என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
39 minute ago
2 hours ago