Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்
மன்னார், சின்னக்கடை கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள கடல் உணவு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நிலையத்திலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம், நேற்று திங்கட்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் சாரதியாக பணிபுரியும் சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்;தரான சுப்ரமணியம் ஜெயராம் (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிரிதொரு நபர், கிணற்றில் சடலம் கிடப்பதைக் கண்டு, பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த மன்னார் பொலிஸார் மற்றும் வவுனியா தடயவியல் பிரிவு பொலிஸார், சடலம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அரவிந்தன் மற்றும் பகுதி கிராமசேவகர் அங்கு சமுகமளித்திருந்தனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் மாவட்ட நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, சடலத்தைப் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலத்தை பிரேத பரிசேதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago