2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கௌதார முனையில் கடல்நீர் உட்புகும் அபாயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி கௌதாரமுனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மணல் அகழ்வினால் கடல்நீர் உட்புகும் அபாயம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கௌதாரி முனையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் தலைமையிலான குழுவினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இக்கிராமத்துக்குச் சென்று பார்வையிட்டு, இறுக்கமான நடைமுறைகளை மேற்கொண்டனர்.

இதனால் மணல் அகழ்வானது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் சிறிது சிறிதாக தற்போதும் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வால் கௌதாரிமுனையில் கடல்நீர் உட்புகும் அபாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக 250 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலம் உவர்நிலங்களாக மாறக்கூடிய நிலையுள்ளது.

இதனால், உவர்நீர் பரவக்கூடிய இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் எடுக்கவேண்டுமெனவும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X