Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மீன்பிடித்துறை, மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடாக மீனவர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதி திட்டத்தினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 3,500 மீனவ குடும்பங்கள் தமது பதிவுகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கடற்றொழில் நிரியல்வளத்துறை மாவட்ட உதவிபணிப்பாளர் விஸ்வலிங்கம் கலிஸ்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதிவுகள் அனைத்தும் இம் மாத இறுதிக்குள் மேற்கொள்ளப்படவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காப்புறுதியினை இழக்க நேரிடும் என அவர் மேலும் கூறினார்.
திடீர் விபத்து, சொத்து அழிவு, கடற்கலம் காணாமல் போதல் போன்ற சம்பவங்களினால் கடந்த காலங்களில் பல மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக மீனவர்களின் வாழ்வாதரத்தினை மேலும் மேற்படுத்துவதற்காக 1 மில்லியன் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அந்த பகுதிகளுக்குரிய சங்கங்கள், மற்றும் சமாசங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கங்கள் ஊடாக பதிவினை மேற்கொள்ள முடியாதவர்கள் அவர்களின் பகுதிக்குரிய மீன்பிடி பரிசோதகர் மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இவ் இறுதிக்கட்ட பதிவினை கொண்டே இனிவரும் காலங்களில் படகுகள், வலைகள் போன்ற கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கு மீன்பிடி அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக உதவிபணிப்பாளர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago