Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மார்க் ஆனந்
முரண்பாட்டுக்குப் பின்னரான காயங்களை ஆற்றும் பணி தொடர்பாக பெண்களுக்கு கொள்கை விளக்கம் அளிக்கும் செயற்றிட்டம் தொடர்பான விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் சமாதானத்துக்கும்; மீள்ளிணக்கத்துக்குமான வளங்கல் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் செல்வாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை சமாதானத்துக்கும் மீள்ளிணக்கத்துக்குமான வளங்கல் நிறுவனம் மற்றும் தேசிய சமாதானப் பேரவையும் ஏற்பாடு செய்தன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த பெண்களை வலுவூட்டும் முகமாக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் ஊடாக 80 வீதமான பெண்களும் 20 வீதமான ஆண்களும் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் ஊடாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சன்னார், ஈச்சளவக்கை, காயாநகர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் மடு பிரதேச செயலக பிரிவில் இரணை இலுப்பங்குளம், முள்ளிக்குளம், பூமலர்ந்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த 25 நபர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உள, உடல் ரீதியான காயங்களை ஆற்றி அவர்களை திடப்படுத்தி வலுவூட்டுவது இதன் நோக்கமாகும். அதன்படி பாதிக்கப்பட் பெண்களின் உளவள மற்றும் உடல் ரீதியாக வலுவூட்டல், பாதிக்கப்பட்ட பெண்களின் சுய நாட்குறிப்பை எழுதுதல், எழுதப்பட்ட நாட்குறிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான தீர்வை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதனை வழங்கி அவர்களுக்கு தேவையான தீர்வை பெற்றுகொடுத்தல்.
களை பகிர்துகொண்டர்.
இக்கூட்டத்தின்போது மூவின பெண்களும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சிணைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றிணை கையளித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago