2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிராம சேவகர்கள் உட்பட 10 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

George   / 2016 மே 10 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, 4 கிராமசேவகர்கள் உள்ளிட்ட 10 பேர் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

ஒரு வருட கால புனர்வாழ்வை பூர்த்தி செய்த 6 பேரும் 3 மாதகாலம் புனர்வாழ்வை பூர்த்தி செய்த 4 கிராம சேவகர்களுமே இவ்வாறு புனர்வாழ்வு காலத்தை பூர்த்தி செய்து விடுவிக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேர்ணல் எம். ஏ.ஆர்.கெமிடன் அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், புனர்வாழ்வின் பின்னரான ஆய்வு பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் பெர்ணான்டோ, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி கெப்டன் குணசேகர, புனர்வாழ்வு பெறுவோர், சமூகமயப்படுத்தப்பட்ட புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X