Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் செய்கை பண்ணப்பட்ட நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல், 75 கிலோ கிராம் மூடையொன்று 1700 ரூபாய்க்கு தங்களிடமிருந்து கொள்முதல் செய்வதால் தாங்கள் நட்டமடைவதாக விவசாயிகள் கூறினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்;ப்பாசனக் குளங்களின் கீழ் 33,650 ஏக்கரிலும், சிறிய குளங்கள் மற்றும் மழையை மட்டும் நம்பி 25,350 ஏக்கரிலும் நெற்செய்கை செய்யப்பட்டது. செய்கைக் காலத்தில் பெய்த அதிகப்படியான மழையால் குறிப்பிடத்தக்க நெற்பயிர்கள் அழிவடைந்தன. தொடர்ந்து வந்த நாட்களில் நெற்கதிர்களில் ஏற்பட்ட மரிச்சுக்கட்டி, எரிபந்து ஆகிய நோய்களாலும் நெற் பயிர் பாதிப்படைந்தது.
இந்நிலையில் எஞ்சிய நெல்லை அறுவடை செய்யும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அறுவடை செய்யும் நெல்லை வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்யும் தனியார் வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராம் நெல்லை 22 ரூபாய் என்ற விலைக்கே கொள்முதல் செய்கின்றனர். அரசாங்கம்,ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபாய் என நிர்ணயித்துள்ள போதும், இவர்கள் இவ்வாறு குறைவாக கொள்முதல் செய்வதால் விவசாயிகள் நட்டமடைகின்றனர்.
களஞ்சியப்படுத்தும் வசதிகள் குறைவு, உடனடி காசுத் தேவை என்பன காரணமாக அந்த விலைக்கு பெருமளவு விவசாயிகள் நெல்லை விற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago