2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கூலர் வாகனம் பிரண்டு விபத்து: இருவருக்கு காயம்

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியிலுள்ள பன்ன வெட்டுவான் பகுதியில் நேற்று சனிக்கிழமை (06) இடம் பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து மன்னார் நகருக்கு மீன் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற சிறிய ரக கூலர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பின்னர், வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X