2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதிவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன்,  இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதிவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நீதிவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X