2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வுகள்

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்கு, கிழக்கு ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம், கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (10) காலை நடைபெற்றது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் சத்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீட (அறிவியல் நகர்) குடிசார் இயந்திரவியல் கலாநிதி எஸ்.எஸ்.சிவகுமார் கலந்துகொண்டார்.

'மனித உரிமை வாழ்வியல்' என்னும் தொனிப்பொருளில் அருட்தந்தை எஸ்.பி.செல்வன், 'மனித உரிமையும் மக்கள் அரசியல்' என்னும் தொனிப்பொருளில் தமிழ்சீர் சமூகத்தின் இணைச் செயலாளர் பி.என்.சிங்கம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X