2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளி. வைத்தியசாலை அபிவிருத்திக்கு ரூ. 990 மில்லியன் தேவை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடியாக 990 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது என்று' வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முதற்கட்ட பணிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 2006ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டபோதும் அதன் தேவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக விபத்துச் சேவைப்பிரிவு உள்ளிட்ட ஏனைய சேவைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கும் போது, 'வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி ஐந்து மாவட்டங்களுக்கும் பங்கிடப்படுகின்றது. இவ்வருடம் யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு அடுத்தபடியாக அதிகநிதி, கிளிநொச்சி மாவட்டத்துககு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் முன்;னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகங்கள் முடிவுகளை எடுப்பார்கள். கிடைக்கின்ற நிதிகளை கொண்டு சிறிய சிறிய வைத்தியசாலையும் மாவட்ட வைத்தியசாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகின்றது.
இரண்டாம் கட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு பெரிய தொகையான நிதிதேவையாகவுள்ளது.

அதற்கான நிதி அடையாளம் காணப்படுவதன் மூலம் அதன் பணிகளை முன்னெடுக்கமுடியும். ஒஸ்ரியா, நெதர்லாந்து அரசாங்கங்கள், வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .