2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கட்டடத் திறப்பு விழா

Sudharshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட காக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், உலக வங்கி நிதியின் கீழ் அமைக்கப்பட்ட புதிய மாடிக்கட்டடத்தின் திறப்பு விழா, நேற்று செவ்வாய்க்கிழமை (02)  இடம்பெற்றது.

அதிபர் ந.விஜயரத்தினம் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்,  வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா  குருகுலராசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வட மாகாண சபை பிரதி அவை இணைத்தலைவர் ம. அன்ரனி ஜெயநாதன்,  வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனீஸ்வரன், வட மாகாண கல்வித் திணைக்கள  தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும்  சிறுவர் பாதுகாப்பு நிதிய உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X