Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 02 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு வட்டுவாகலில் இறால்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் தடை விதித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த பெரேராவிடம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வட்டுவாகல் பாலத்திலிருந்து பெருங்கடலுக்குச் செல்லும் இருபுறங்களிலும் கடற்படையினரும் இராணுவத்தினரும் நிலைகொண்டுள்ளதாகவும் குறித்த இப்பகுதியிலேயே இறால் பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேற்படி நிலைமை தொடர்பாக கடந்த ஒருவாரத்துக்கு முன்னரும் முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடமும் கடற்றொழிலாளர்களினால் மனுவொன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
44 minute ago