Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 30 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் யோ.பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1990ஆம்; ஆண்டு முதல் இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தற்போது முழங்காவில் இரணைமாதா நகரில் வாழ்ந்துவருகின்றனர். மீள்குடியேற்றம் நடைபெற்று 6 ஆண்டுகள் ஆகியும் மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இரணைதீவில் மீள்குடியேற்றத்துக்கும் மீன்பிடிக்கும் அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுகின்றது.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்திலும் இரணைதீவில் மீன்பிடிக்குமாறு அனுமதிக்கும்படி சமாசத்தலைவரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இவ்விடயம் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் ஆராய்வோமென இணைத்தலைவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago